Friday, October 22, 2010

நீ செய்த மாயமென்ன?


கண்ணெதிரே நீ நின்ற போதும் உன்னை
காதலிக்க தோன்றவில்லை!
தோளோடு தோள் உரசி
என்னை கடந்து சென்ற போதும்
உன்னை காதலிக்க தோன்றவில்லை!
எப்போது உன்னை காதலிக்க தொடங்கினேன்?
இப்போது வரை எனக்கு தெரியவில்லை!

ஆனால்
உனையன்றி வேறு ஒரு பெண்ணை
காதலியாக்க தோன்றவில்லை!
எனக்கானவள் நீ என்று மட்டும் நம்பினேன்.
என் உலகம் நீ தான் என மாறியது!
உன்னை சுற்றி திரிந்தேன்
உனக்கு தெரியாமலே!

என்ன மாயம் செய்தாய்?

No comments:

Post a Comment