கல்லூரியில் காதல் செய்தேன்.
கன்னி உன் நினைவால்
கவிதை பல செய்தேன்.
ஒவ்வொரு நாளும் நம் உடைகளின் வண்ணம்
ஒன்றாக இருக்க வேண்டுமென்று
கடவுளை பிரார்த்தனை செய்தே
காலையில் நானும் உடையணிந்தேன்.
கல்லூரியிலிருந்து பேருந்து நிருத்தம்வரை
காக்கிச்சட்டை போடாத காவலனாய்
உன்னை பின்தொடர்ந்தேன்
உனக்கு தெரியாமலே!
இவையெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கலாம்!
எப்படி இருந்தாலும் கவலை இல்லை!
ஏனென்றால் நானும் ஒரு சராசரி காதலன் தான்!
சொல்லாமல் காதல் வளர்த்தேன்!
சொல்லிவிட நாளும் துடித்தேன்!
உனக்கு - வெகுதொலைவில் நான்!
எனக்கு - மிகஅருகில் நீ!
ஆனால்
நான் யாரென்று உனக்கு தெரியாத போது
எத்தனை காதல் செய்து
என்ன பயன்!?
No comments:
Post a Comment