Wednesday, July 13, 2011

காதல் வலி

இமைகளை திருடிக்கொண்டு
கனவுகளை கண்டுமகிழ் என
கட்டளை இடுகிறாள்!
அமைதியாய் இருந்துகொண்டு
இம்சையை இனிமையாய் தருகிறாள்!
அவளை
பார்த்ததை தவிர
பிழையேதும் செய்யவில்லை!
ஆனால்
தவிப்பும் தாகமும் தண்டனையாய்
பெற்றுக்கொண்டிருக்கிறேன்!
இவையாவும் இன்றுவரை
அவள்
அறியாமல் இருப்பதனால்
இதயப்பகுதி ரணமாய் எரிகின்றது!!
இந்த தீராவலி தான் காதலா?

Tuesday, May 24, 2011

நீயின்றி ஒரு காதல்!


வருடிச்சென்ற பூங்காற்று
வலிதந்து சென்றது ஏனோ?
கல்லில் செதுக்கிய காதல்
கரைந்திடும் மணல் சிற்பம் தானோ?

எங்கோ உன் குரல் கேட்குதடி!
என் நெஞ்சம் உன் நினைவை நாடுதடி!
எங்கும் இருக்கிறாய்!
என்னை அழைக்கிறாய்!
உன் உயிரின் வாசனை
நான் உணர்கிறேன்!

நீ இறந்தும்
என்னுள் வாழ்கிறாய்!
நான் இருந்தும்
இறந்தே வாழ்கிறேன்!

நம் காதலை சுமந்தபடி!

Thursday, April 7, 2011

சாபம்


சபித்துச் சென்றது யார்?
சாலையோரத்தில் வளர்ந்து வாழ்ந்தும் கொண்டிருக்கிறது
மனித மரங்கள்!