வருடிச்சென்ற பூங்காற்று
வலிதந்து சென்றது ஏனோ?
கல்லில் செதுக்கிய காதல்
கரைந்திடும் மணல் சிற்பம் தானோ?
எங்கோ உன் குரல் கேட்குதடி!
என் நெஞ்சம் உன் நினைவை நாடுதடி!
எங்கும் இருக்கிறாய்!
என்னை அழைக்கிறாய்!
உன் உயிரின் வாசனை
நான் உணர்கிறேன்!
நீ இறந்தும்
என்னுள் வாழ்கிறாய்!
நான் இருந்தும்
இறந்தே வாழ்கிறேன்!
நம் காதலை சுமந்தபடி!