Wednesday, July 13, 2011

காதல் வலி

இமைகளை திருடிக்கொண்டு
கனவுகளை கண்டுமகிழ் என
கட்டளை இடுகிறாள்!
அமைதியாய் இருந்துகொண்டு
இம்சையை இனிமையாய் தருகிறாள்!
அவளை
பார்த்ததை தவிர
பிழையேதும் செய்யவில்லை!
ஆனால்
தவிப்பும் தாகமும் தண்டனையாய்
பெற்றுக்கொண்டிருக்கிறேன்!
இவையாவும் இன்றுவரை
அவள்
அறியாமல் இருப்பதனால்
இதயப்பகுதி ரணமாய் எரிகின்றது!!
இந்த தீராவலி தான் காதலா?

2 comments:

  1. //இந்த தீராவலி தான் காதலா?// adhe thaan!!! aumai... :)

    ReplyDelete